வலிமையான வானரம் போல் அடியேன் என்றுமே இல்லை !
சிறு துரும்பை எடுத்து போடக்கூட கையில் வலுவுமே இல்லை !
ஒரு கல்லை நீயும் முதுகில் வைத்து உதவி செய்வாயே
நாமும் கண்ணனுக்காய் ரொம்பச் சின்னதாயேனும் அலுவல் செய்யலாம் !
என்று சொல்லிப் பாலம்கட்ட உதவியாய் வந்த அந்த அணிலின் வீரம்
நானும் பெற்று துடங்கி விட்டேன் என் சிறு அடுப்பூதும் அலுவல் அதனை !
‘கவிதைகள்’ பகுப்புக்கான தொகுப்பு
ரொம்பச் சின்னதாயேனும் உனக்கொரு போகம் !
Posted in கட்டுரைகள், கவிதைகள், வாழ்வியல் தகவல், Spiritual, குறிச்சொல் இடப்பட்டது சீதை, ராமர், வலிமையான வானரம், வானரம் on ஜூலை 9, 2011 | 1 மறுமொழி »
அக்கணம் தொட்டே வைகுண்ட வாசம் நமக்கு !
Posted in கவிதைகள், கைமணம், சமையல் குறிப்புகள், திரைகடல் ஸ்பெஷல், வாழ்வியல் தகவல், Spiritual, குறிச்சொல் இடப்பட்டது சக்ரம், சங்கு, சங்கு சக்ரம் on ஜூன் 19, 2011 | Leave a Comment »
எம்கண் கொள்ளப் பார்ப்பதற்காய் கடல் கொண்ட
கார் வண்ணம் தழுவும் திருமாலின் தோற்றம்
எம்முயிர் வளர் நுகர்ச்சியாய் இளந்துளசி மாலையோடு
பால் வெண்ணை கமழும் அவன் மேனி நாற்றம்
Serving Only His lotus feet !
Posted in கவிதைகள், திரைகடல் ஸ்பெஷல், வாழ்வியல் தகவல், English Articles, Spiritual, குறிச்சொல் இடப்பட்டது Boomi devi, Ekadasi alankaram, His Lotus feet, samsara sahara, Thirumanjanam, Transcendental Boar, Vamana on ஜூன் 9, 2011 | Leave a Comment »
In Past, I used to be a soul of this and that ..
Never was I genuinely happy and fully content
Now that I am at His sheltering lovely lotus feet
At last I am at great comfort in His divine Nest !
பகவானிற்கு சமைக்க மடி அவசியமா?
Posted in கட்டுரைகள், கவிதைகள், கைமணம், சமையல் குறிப்புகள், திரைகடல் ஸ்பெஷல், Spiritual, குறிச்சொல் இடப்பட்டது போகம், offering song, prasadam offering kirtan, PRASADAM OFFERING SONG on மே 30, 2011 | 4 மறுமொழிகள் »
ஒரு பக்தரின் இல்லத்தில் விருந்திற்கு அழைத்தார்கள் .. சாப்பிடும்போது சாதம் வடித்த பாத்திரத்தில் கொஞ்சம் மிகுந்தது ..அவர் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அதே கையால் அதை வழித்துத் தன் தட்டில் வைத்துக் கொண்டார் .. எனக்கு பகவானே என்று இருந்தது .. !!!!!
அன்றாடம் உனக்கொரு போகம் !
Posted in கவிதைகள், கைமணம், சமையல் குறிப்புகள், திரைகடல் ஸ்பெஷல், வாழ்வியல் தகவல், Spiritual, குறிச்சொல் இடப்பட்டது Prasadam, PRASADAM OFFERING, PRASADAM OFFERING SONG on மே 28, 2011 | Leave a Comment »
அயோத்தியில் உன் அன்னையர் கவுசலையும் சுபத்திராவும்
அவரோடு கேகேயியும் அதிகாலை முதற் கொண்டே
அரண்மனையின் அமுத கூடத்தில் ஆவலாய் ஆசையோடு
தங்கத் தட்டில் தக தகக்கும் நெய் பூரியும் , பவுர்ணமிபோல் போளியும்
பட்டு பட்டு ரொட்டி வகையும் கர கர கச்சோரியோடு காகராவும்
பத்து வகை பஜ்ஜி வடையும் பள பளக்கும் தோக்ளாவும்
நெய் ஓடும் வெண்பொங்கலும் நவ இரத்தின சித்திரானங்களும்
கெட்டித் தயிர் பச்சடியும் நறுமணக்கும் நல் பொடி வகையும்
பதினாறு விதமான காய் கறி கூட்டும் கம கமக்கும் பாஜியும் சட்னியும்
மொரு மொரு பதிற் பேணியும் சித்திரமாய் வண்ண வண்ண ஜிலேபியும்
மெத்து மெத்து ரசகுல்லாவும் பாற்கடலாய் முந்திரி பால் பாயசமும்
இப்படியாய் தொடங்கி நூற்றியெட்டு இனிப்பு வகையும் இதனூடே
பேரும் நானறியா எண்ணி(யும்) மாளா அறுசுவை போஜனத்தை
ஒருவரேனும் சளைக்காமல் ரொம்ப ரொம்ப ஆசையோடு அக்கறையாய்
செல்லகட்டி உனக்கெனவே போட்டி போட்டு தாமே சமைத்து
யார் கண்ணும் பட்டு விடாமல் தசரதனுக்கும் தெரியாமல்
வக்கணையாய் தருவாரே அன்றாடம் உனக்கொரு போகம் !