எம்கண் கொள்ளப் பார்ப்பதற்காய் கடல் கொண்ட
கார் வண்ணம் தழுவும் திருமாலின் தோற்றம்
எம்முயிர் வளர் நுகர்ச்சியாய் இளந்துளசி மாலையோடு
பால் வெண்ணை கமழும் அவன் மேனி நாற்றம்
அவன் அருள் பொங்கும் பார்வையோடு சட கோபமும்
எம்வினை தீர்க்க நீண்டெம்முடி தொடும் ஸ்பரிசம்
அமுதெலாம் தோற்கும் அவன் உண்ட பின் காதலுடன்
யாம் சுவைக்க எமக்காய் அவன் வைக்கும் மீதம்
தெய்வக் குழலோடு சங்கு சக்ரம் கதை ஏந்தி
அதனோடு அவன் அருள் பொங்கும் பார்வை ஏந்தி இப்படியாய்
ஐம்புலன்களை இளங்குழந்தை செயலாக இன்பமோடு யாமடக்க
திரு அன்னையவள் துணையயொடு எமக்கெனவே திருமலையில்
திரு வேங்கடத்தை வ்ருந்தாவனமாக்கி விண்ணுயர உறைந்திருக்கும்
அந்தச் ச்யாமளக் கண்ணனை கண்டுவிட்டால் போதுமே
அக்கணம் தொட்டே வைகுண்ட வாசம் நமக்கு !
அக்கணம் தொட்டே வைகுண்ட வாசம் நமக்கு !
ஜூன் 19, 2011 Janu ஆல்